search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுங்கச்சாவடி ஊழியர்கள்"

    • 28 ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இன்று 32-வது நாளாக நீடித்தது.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை செ ங்குத்து சுங்கச்சாவடியில் 28 ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்ததை கண்டித்து தினமும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தலைகீழாக நின்று தண்ணீர்குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில் எங்களை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும். நாங்கள் 13 ஆண்டுகள் வேலை செய்து இருக்கிறோம். அதற்கான தொகையை செலுத்த வேண்டும் என்றனர்.

    இந்த போராட்டம் இன்று 32-வது நாளாக நீடித்தது. அப்போது ஆதிவாசி வேடமிட்டு சுதந்திரம் வாங்கியும் இந்த தமிழகத்தில் நமக்கு ஒரு விடிவு கிடைக்கவில்லை என்ப தை அடையாளப்படுத்தும் விதமாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்து உள்ளனர்.

      கள்ளக்குறிச்சி: 

      கள்ளக்குறிச்சி மற்றும் திருமாந்துறை சுங்கச்சா வடியில் 56 பணியாளர்கள் பணி நீக்கத்தை கண்டித்து உளுந்து ர்பேட்டை செங்கு றிச்சியில் சுங்கச்சாவடி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் இன்று 19-வது நாளாக நீடித்தது. இந்த நிலையில் நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தனியார் நிர்வாகம் வடமாநில ஆட்களைகொண்டு சுங்கச்சாவடியை இயக்கி வருவதால் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு நிலவி உள்ளது.

      • கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்க ச்சாவடி பணியாளர்கள் 28பேர் பணி நீக்கம், ஆள் குறைப்பு செய்யப்பட்டனர்.
      • சுங்க சாவடி அனைத்து ஊழியர்கள் சேர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

      கள்ளக்குறிச்சி: 

      கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூ ர்பேட்டை சுங்க ச்சாவடி பணியாளர்கள் 28பேர் பணி நீக்கம், ஆள் குறைப்பு செய்யப்பட்டதை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட சுங்க சாவடி அனைத்து ஊழியர்கள் சேர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சென்னை-திருச்சி செல்லும் வாக னங்கள் அனைத்தும் பணம் வழங்காமல் சுதந்திரமாக செல்கிறது.

      அதோடு மட்டும ல்லாமல் ஊழியர்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்காமல் இருப்பதால் அங்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமை யில் 50-க்கும் போலீசார் மேற்பட்டோர் குவித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுங்கச்சாவடி பணியா ளர்கள் அனைவரும் 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கதாகும்.

      • பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆஜர் ஆனார்கள்.
      • இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட அனைவரை யும் அழைத்து விசாரணை செய்து வந்த வண்ணம் உள்ளனர்.

      விழுப்புரம்:

      முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாது காப்பி ற்காக பாதுகாப்பு பணியில் இருந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை தந்ததாக விழுப்புரம் குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட அனைவரை யும் அழைத்து விசாரணை செய்து வந்த வண்ணம் உள்ளனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்கள் 2 பேர் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய சிறப்பு டிஜிபி இதில் ஆஜராகவில்லை. 

      ×